உனைத்தேடும் உன்னதம் இங்கே
உயிர்வாழும் உள்ளுக்குள் நெஞ்சே
கவிபாடக் கனவுகள் கண்டேன்
கண்ணுக்குள் நீயில்லை சகியே !
(உனைத்தேடும் உன்னதம் இங்கே )
சிறகுகள் முளைக்கின்ற நொடிகள்
பறத்தலை நினைத்திடும் மனது
உறவுகள் அணைத்திடும் வரையில்
துறவறம் நெஞ்சினில் தொலைவில்